கப்பல் பயணிகளிடம் லஞ்சம். யாழ்ப்பாத்தில் இருந்த தென்பகுதிக்கு செல்லும் கப்பல் பயணிகளிடம் பெரும் தொகைப் பணத்தை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு இராணுவ சிப்பாய்கள் பயனிகளை முன்னுக்கு அனுப்பி வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள். சிங்கள மகாவித்தியாலத்தில் அமைந்துள்ள இராணுவத்தினரின் பொது மக்கள் தொடர்பகத்திற்குச் சென்று வருவதற்கு இடையில் கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவ சிப்பாய்கள் இத்தகைய லஞ்சம் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள். இதன் காரணமாக அதிகாலை முதல் காத்திருப்பவர்கள் கூட முன் செல்ல முடியாத போதிலும் கையூட்டுக் கொடுப்பவர்கள் மிகவும் இலகுவாக முன்னுரிமை அடிப்படையில் தமது பயண சீட்டை இலகுவாக பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பதாக தெரியவருகின்றது.





