Saturday, September 30, 2006

மருதனார்மடத்தில் காவலரண்கள் அதிகரிப்பு. யாழ்ப்பாணம் உடுவில் பகுதியைத் தலைமையகமாக கொண்டுள்ள 513 படையனியினர் நாளுக்கு நாள் மருதனார்மடம் உடுவில் வீதியில் இராணுவக் காவலரண்களை அதிகரித்துக் கொண்டே செல்கின்றார்கள். மருதனார் மடம் சந்தியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள தலைமையகத்தற்கு செல்லும் வீதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும் இரண்டு பாரிய காவல் நிலையங்கள் ஒவ்வொன்றும் சுமார் ஐம்பது வரையிலான பனைமரங்களைக் கொண்டு நிர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். உடுவில் மகளிர் கல்லூரியும் குறிப்பிட்ட முகாமுக்கு மிகவும் அண்மையாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக அப்பகுதியில் நிலைகொண்டுள்ள வீடுகளில் வாழ்பவர்கள் பெரும் பயத்துடன் தமது அன்றாட வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள் என பலரும் தெரிவிக்கின்றார்கள்