யாழில் வீதியோரங்களில் இயற்கையை அழித்துவரும் படையினர். யாழ்ப்பாணத்தில் உள்ள பாரிய மரங்களை அழித்துவரும் இராணுவத்தினரால் யாழ் குடாநாட்டின் இயற்கை வளம் நாளுக்கு நாள் அழிக்கப்பட்டுவருகின்றது. குறிப்பாக பிரதான வீதிகளின் இரு மருங்கிலும் உள்ள பயன்தரு மரங்களான மா,பலா,தென்னை கமுகு, உட்பட மற்றும் வீதியோரங்களில் நிழலுக்கு நாட்டப்பட்டு இருந்த பல வருடங்கள் சென்ற மரங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இதனைச் சாட்டாக வைத்து எம்மவர்களில் ஒரு பகுதியினரும் குறிப்பிட்ட வளவுகளில் தாம் வாடகைக்கு இருக்கும் வீடுகளில் உள்ள மரங்களையும் தறித்த தமது தேவைக்கு பயன்படுத்தும் தன்மையும் காணப்படுகின்றது. இராணுவத்தின் உதவியுடன் இத்தகைய நடவடிக்கையை தமக்கு சாதமாகப் பயன்படுத்தி வீதியோரங்களில் உள்ள மரங்களை தறித்து எடுப்பதில் யாழ்ப்பாணத்தில் ஒரு குழுவினர் செயல்படுகின்ற போதிலும் இதனை இட்டு யாரும் கவலைப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கதாகும். இதே நேரம் குறிப்பி;ட்ட மரங்கள் தறிக்கப்படுவதையிட்டு குறிப்பிட்ட மரக் கூட்டுத்தாபனமோ சுற்றுச் சூழல் அதிகாரிகளோ எந்த வகையான நடவடிக்கையும் எடுக்கவில்லையென்பதும் மரக் கூட்டுத்தாபன அதிகாரிகள் பணத்தைப் பெற்றுக் கொண்டு எந்த வகையான தடையும் இன்றி மரங்களை குறிப்பிட்டவர்கள் எடுத்தச் செல்ல அனுமதித்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாளை முதல் சுற்றுச் சூழல் வாரமாக ஒரு வாரத்தைப் பிரகடனப்படுத்தி தென் பகுதியில் இயற்சை வளம் பேன மரங்கள் நாட்டப்படுவது முதல் மற்றும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் போதிலும் யாழ்ப்பாணத்தில் உள்ள மரங்கள் அழிக்கப்பட்டு சுடுகாடாக மாற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்





