சிலாபம் உடப்பில் வெள்ளை வான் கும்பலால் இருவர் கடத்தல் சிலாபம் உடப்பு பிரதேசத்தில் இருந்து இருவர் நேற்றிரவு கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக முந்தல் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. உடப்பு பார்த்தசாரதி பெருமாள் ஆலய பரிபாலன சபை உறுப்பினரான தாமோதரன் மகேந்திரன் மற்றும் பரிபாலன சபையின் ஊழியர் சுப்பிரமணியம் பரமசிவம் ஆகியோரே கடத்திச்செல்லப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடப்பு 6 ஆம் வட்டார பகுதியில் இருந்து இவர்கள் ஆயுதங்களுடன் வெள்ளை வாகனம் ஒன்றில் வந்தவர்களால் கடத்திச்செல்லப்பட்டதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனிடம் உறவினர்கள் முறையிட்டுள்ளனர். இதனையடுத்து அவர் காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்ணான்டோவுடன் தொடர்புகொண்டு இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்சவின் கவனத்திற்கும் இந்த விடயத்தை கொண்டு வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே 6 மாதங்களுக்கு பின்னர் காவல்துறையினரால் விசாரரணை செய்ய்பட்டவர்கள் என்ற தகவலையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்





