விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் சர்வதேச தன்னார்வ நிறுவன பிரதிகள் சந்திப்பு.
விடுதலைப் புலகளின் பிரதிநிதிகளுக்கும் சர்வதேச தன்னார்வ நிறுவன பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தில் இன்று முற்பகல் சந்திப்பு இடம்பெற்றது.
சந்திப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். விடுதலைப் புலிகள் தரப்பில் தமிழீழ அரசியற்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன், வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்களுக்கான விடுதலைப் புலிகளின் இணைப்பாளர் பாவரவசன், விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் மற்றும் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையனும் கலந்துகொண்டுள்ளனர்.
சந்திப்பில் தமிழர் தாயகத்தில் சிறீலங்காப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட ஆக்கிரமிப்பு யுத்தத்தை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய அவசர உதவிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
Wednesday, September 27, 2006
Wednesday, September 27, 2006





