Wednesday, September 27, 2006

போருக்கு எதிரான முன்னணிக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு போருக்கு எதிரான முன்னணிக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது கொழும்பு வாழ்; தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்பிலும் வடக்குகிழக்கில் இடம்பெறும் வன்முறைகள் பொத்துவில் மற்றும் மூதூர் சம்பவங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பின் போது கொழம்பில் தமக்கு கிடைத்த 26 சம்பவங்கள் குறித்த ஆவணங்களை மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஜனாதிபதியிடம் கையளித்தார். சந்திப்பின்போது தகவல்களை கேட்டறிந்த ஜனாதிபதி ஆட்கடத்தல்களை முடிவுக்கு கொண்டு வர தாம் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைக்கவுள்ளதாக குறிப்பிடடார். அதில் சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொள்ளப்போவதாக உறுதியளித்தார். காணாமல் போனோர் பாதுகாப்பு துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தால் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார் இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, கே ஏ பாயிஸ், நடராஜா ரவிராஜ் மற்றும் சமாதான ஆர்வலர் குமார் ரூபசிங்க, உட்பட்டோர் பங்கேற்றனர்