நிருபமா ராவை இலங்கைக்குள் மாத்திரம் கட்டுப்படுத்தி வைக்க இந்தியாவுக்கு விருப்பமில்லை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் நிருபமா ராவை இலங்கைக்குள் மாத்திரம் கட்டுப்படுத்தி வைக்க இந்தியாவுக்கு விருப்பமில்லை என இந்திய இளைஞர் விவகார அமைச்சர் மணிசங்கர் ஐயர் தெரிவித்துள்ளார். எனவே தான் இந்தியாவுக்கு மிக முக்கியதமான நாடாக கருதப்படும் சீனாவுக்கு அவரை உயர்ஸ்தானிகராக அனுப்பிவைக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 47 வது பண்டாநாயக்கவின் நினைவு சொற்பொழிவு இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய மணிசங்கர் ஐயர், நிருபமா ராவ் இந்திய வெளியுறவு சேவையில் மிகவும் பரிச்சம் உள்ளவர் என குறிப்பிட்டார். இந்தியாவை பொறுத்தவரை இலங்கையின் ஒருமைப்பாடு. இறைமை என்பவற்றுக்கு உட்பட்டதாகவே இனப்பிரச்சினை தீர்வு காணப்படவேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளது. இதன் அடிப்படையிலேயே அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்றும் மணி சங்கர் ஐயர் தெரிவித்தார்.





