Wednesday, September 27, 2006

படையினரின் கோரிக்கைகள் வர்த்தகர்களால் மறுப்பு. யாழ் மாவட்ட வர்த்தகர்களை கடற்படையினரின் உதவியுடன் கப்பலில் பொருட்கள் எடுத்துவர நடவக்கையெடுக்கும் படி படைத்தரப்பின் கோரிய போதிலும் அதற்கு வர்த்தகர் இணங்க மறுத்துள்ளார்கள் கடந்த வாரம் யாழ்ப்பாணம் படைத்தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட வர்த்தக சங்கத்தின் பிரதி நிதிகளிடம் இத்தகைய கோரிக்கை படைத்தரப்பினால் வைக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் கடற் பயணத்திற்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லையென அறிவித்ததைத் தொடர்ந்தே வர்த்தகர்கள் தமது இந்த செல்பாட்டை மேற் கொண்டுள்ளதுடன் பல நோக்கக் கூட்டுறவச் சங்கங்களிற்கு பொருட்களைக் கொண்டு வந்த கொடுக்கும் படியும் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதே போன்று மருந்தகங்களின் உரிமையாளர்களும் கடற் படையின் பாதுகாப்பில் மருந்துப் பொருட்கள் கொண்டுவர மறுத்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்