Monday, September 25, 2006

சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழு அடுத்தவாரம் கூடுகிறது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் கட்சியின் தலைவரும் ஜனாதி பதியுமான மகிந்த ராஜபக்ஸ தலைமையில் அடுத்த வாரமளவில் நடைபெறவிருக்கின்றது. இந்த மத்திய குழுக் கூட்டத்தில் இனப்பிரச்சினை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையை தயாரிப்பதற்காக அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் சாராம்சம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும். ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட சாராம்சம் தொடர்பாக மத்திய குழுக்கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டதன் பின்னர் இனப்பிரச்சினை தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கை பகிரங்கப்படுத்தப்படவிருக்கின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையை தயாரிப்பதற்காக அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் சாராம்சம் அண்மையில் நடைபெற்ற கட்சியின் 54 ஆவது மாநாட்டில் வைத்து கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபாலவிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.