Monday, September 25, 2006

கிழக்குப் பல்கலைக்கழக உள்வாரி மாணவர்களால் சாகும் வரை உண்ணாவிரதம். மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்வாரி பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்களினால் சாகும்வரையிலான உண்ணாவிரதம் ஒன்றினை இன்று ஆரம்பித்துள்ளதாக பல்கலைக்கழக மாணவர்களினால் தெரிவிக்கப்படுகின்றது. 2007ம் ஆண்டுக்கான வெளிவாரியான மாணவர்களுக்கு வெளிவாரி கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இதில் முதலாம் வருடம் முடிவடைந்த பின்னர் இரண்டாம் வருடம் உள்வாரியாக சேர்க்கப்படுவதனை ஆட்சேபித்தே இந்த உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை வெளிவாரியாக முதலாம் வருடத்தில் சித்தி பெறும் மாணவர்கள் உள்வாரியாக கற்பதற்கு கூடிய வளம் உள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் இ.ரவிந்திரநாத் தெரிவித்தார்.