Monday, September 25, 2006

ஹக்கீமின் பாதுகாப்பு தொடர்பாக ஜனாதிபதியுடன் விரைவில் ஆலோசனை -- பசில் ராஜபக்ஸ முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு வழங்கப்பட்டு வந்த அதிரடிப்படையினரின் பாதுகாப்பு விலக்கப்பட்டது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்தாலோசிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மு. கா. தலைவரை கடந்த சனிக்கிழமை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு உரையாடியபோதே பசில் ராஜபக்ஷ மு. கா. தலைவர் ஹக்கீமிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார். விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட சமயம் தான் நாட்டில் இருக்கவில்லை என்றும் இப்போது ஜனாதிபதி நாட்டில் இல்லை என்பதால் அவர் நாடு திரும்பியவுடன் இது தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக அவர் ஹக்கீமிடம் மேலும்தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நாடு திரும்பியுள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் இது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு நல்லதொரு தீர்மானம் எடுக்கப்படலாம் என மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.