யாழில் மின்சாரம் துண்டிப்பு - மக்கள் அவலம் மின்சார விநியோகம் முற்றாகத்துண்டிக்கப்பட்ட நிலையில் குடாநாட்டில் பாரிய மனிதாபிமான நெருக்கடி உருவாகிவருவதாக ஐக்கியநாடுகள் சிறுவர் நிதியம் அறிவித்துள்ளது. மின்சாரமும் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக அமைப்பின் யாழ் அலுவலக தலமையதிகாரி யூமித் புருனோ குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக ஒருமணி நேரம் மாத்திரமே மின்சாரம் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் பெற்றோல் இல்லை. கட்டுமானப் பணிகள் நடைபெறுவதில்லை. குடாநாட்டுக்கு இரண்டு கப்பல்களில் அரசாங்கம் அவசர உதவிப்பொருட்களை அனுப்பியுள்ளது. இவற்றில் 5000தொன் உணவும் அடங்கும் எனத்தெரிவித்தார். எனினும் மாதமொன்றுக்கு குடாநாட்டுக்கு 10000மெற்றிக்தொன் தேவை என்றும் சுட்டிக்காட்டினார். உணவுப் பற்றாக்குறை தொடர்வதால் தாய்மார்களும் குழந்தைகளும் கடும் சுகாதார நெருக்கடியை சந்திப்பதால் நாங்கள் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளப்போகிறோம். ஏன அவர் தெரிவித்தார். சிறுவர்களே மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்வு குடிநீர் தட்டுப்பாடு போதிய உணவின்மை பாடசாலைகளுக்கு செல்லமுடியாமை என சகல வழிகளிலும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார். கடந்த வருடம் இவர்கள் கடல்கோளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர் அவர்கள் மீண்டும் இடம்பெயர்ந்துள்ளனர். புலர் மோதல்களில் தமது குடும்பத்தினரை இழந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். மீனவர்களும் விவசாயிகளும் நாளாந்த தொழிலாளர்களுமே பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யுனிசெப் சுட்டிக்காட்டியுள்ளது.





