Monday, September 25, 2006

சு.ப.தமிழ்ச்செல்வனுடன் நாளை மறுதினம் கண்காணிப்புக்குழுத் தலைவர் சந்திப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை நாளை மறுதினம் இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் தலைவர் லார்ஸ் ஜொஹான் ஷோல்வ்பெர்க் சந்திக்கவுள்ளார். கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகத்தில் நாளை மறுதினம் புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது. சு.ப.தமிழ்ச்செல்வனின் அழைப்பின் பேரிலேயே வருகை தரும் கண்காணிப்புக் குழுவின் தலைவருடன் இச்சந்திப்பு நடைபெறவுள்ளதாக விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். நன்றி புதினம்