Wednesday, August 30, 2006

கடத்தப்பட்ட குருபரன் வெள்ளை வான் ஆயுததாரிகளால் விடுதலை. சூரியன் எவ்.எம் வானொலியின் பிரதம செய்தியாசிரியர் நடராஜா குருபரன் இன்று அதிகாலை 3 மணியளவில் வெள்ளை வான் ஆயுததாரிகளால் விடுவிக்கப் பட்டுள்ளார். நேற்று அதிகாலை கடத்தப்பட்ட இவர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் வெள்ளை வான் ஆயுதாரிகளால் கடத்தப்பட்டு விசாரணையின் பின் கடுமையான எச்சரிக்கையுடன் இன்று களுபோவிலப் பகுதியில் பவிடுவிக்கப்பட்டுள்ளார்.