விடுதலைப்புலிகள் எனக்கூறி கப்பம் கேட்ட முன்னாள் இராணுவ வீரர் கைது பிரபல வாகன விற்பனை நிலையம் ஒன்றிற்கு விடுதலைப் புலிகள் என தொலைபேசியில் தெரிவித்து பத்து இலட்சம் ரூபா கப்பம் கோரியதாகக் கூறப்படும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை கண்டி குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு கப்பமாக 10 இலட்சம் ரூபா வேண்டும் எனவும், இதனை கண்டி நகருக்கு அண்மையாகவுள்ள மைதானம் ஒன்றிற்கு எடுத்து வந்து குறிப்பிட்ட நேரத்தில் வைத்துச் செல்லவேண்டும் எனவும், இது தொடர்பாக பொலிசாருக்கோ அல்லது படையினருக்கோ அறிவிக்க கூடாதெனவும் தொலைபேசி மூலம் கண்டியிலுள்ள பிரபல வாகன விற்பனை நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட நேரத்தில் வாகன விற்பனை நிலைய உரிமையாளர் குறிப்பிட்ட இடத்தில் பணப்பையை வைத்துள்ளார்.கப்பமாக பணம் கேட்ட நபர் அப் பணப்பையை எடுக்கச் சென்ற வேளை சிவில் உடையில் மறைந்திருந்த பொலிசார் அந்நபரை மடக்கி பிடித்துள்ளனர். விசாரணையின் போது சந்தேக நபர் முன்னர் இராணுவத்தில் கடமையாற்றியவர் என்றும் கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர் என்றும் தெரியவந்துள்ளது.பொலிசார் சந்தேக நபரை கண்டி நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்த போது நீதிவான் சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
Sunday, August 27, 2006
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.