வாகரைக்கு 3ம் கட்ட உலருணவு பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. மூதூரில் இருந்து மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான மூன்றாம் கட்ட உலருணவு நிவாரணம் 8 லொறிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. மகேசன் தெரிவித்துள்ளார். வாகரை அகதிகளுக்கு இதுவரை 84 ஆயிரம் கிலோ அரிசி. 84 ஆயிரம் கிலோ கோதுமை மா உட்பட பருப்பு, சீனி ஒயில், டின் மீன் என்பன அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. வாகரை பிரதேசத்தில் இடம் பெயர்ந்த சுமார் 6 ஆயிரத்து 400 குடும்பங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண நடவடிக்கைகளுக்கென சுமார் 10 மில்லியன் ரூபா அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.
Sunday, August 27, 2006
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.