Sunday, August 27, 2006

ரணில் நாடு திரும்பினார். அரசாங்கத்தில் இணையும் படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், அடுத்த வாரத்தில் நடைபெறவிருக்கும் செயல்குழு கூட்டத்தில் இது தொடர்பாக ஆராயப்படும் என கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் திஸ்ச அத்தநாயக்கா தெரிவித்துள்ளார். தேசிய பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய தேசிய கட்சி தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, நோர்வே, இங்கிலாந்து, மற்றும் டென்மாக் ஆகிய நாடுகளுக்கான பயணத்தை நிறைவு செய்து கொண்ட எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நாடு திரும்பி உள்ளார். இதற்கிடையே, ஜே.வி.பி. யையும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மீண்டும் கேட்டுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.