Tuesday, May 01, 2007

மனித உரிமை மீறல்கள்: பாதுகாப்புப் பிரிவின் 30 பேர் கைது.

[செவ்வாய்க்கிழமை, 1 மே 2007] இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்க இராணுவம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 30 பேர் உட்பட 450 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பவ்ரெல் அமைப்பு தெரிவித்துள்ளது. பவ்ரெல் அமைப்பின் தலைவர் கிங்ஸ்லி ரொட்றிக்கோ கூறியுள்ளதாவது: ஆட்கடத்தல்கள், காணாமல் போதல் மற்றும் பொதுநலப் பணிகளில் ஈடுபட்ட தலைவர்களின் படுகொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் சம்பவங்களில் தொடர்புடைய 452 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மனித உரிமை மீறல்கள் தொடர்பான எமது அமைப்பின் அறிக்கை எதிர்வரும் 15 ஆம் நாள் வெளியிடப்பட உள்ளது. இதுவரை பொதுமக்களிடமிருந்து ஆயிரக்கணக்கான முறைப்பாடுகளை நாம் பெற்றுள்ளோம். பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளைப் பெறுவதற்காக 24 மாவட்டங்களில் 24 பவ்ரெல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய ஆட்கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் உள்ளிட்டவைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டத்தை நாம் மேற்கொண்டுள்ளோம். பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக சில மாவட்டங்களில் சட்டத்தரணிகளையும் நாம் நியமித்துள்ளோம் என்றார் அவர். நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.