[திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007]
தமிழக மீனவர்களை விடுதலைப்புலிகள் கொலை செய்தோ அல்லது கடத்தியோ இருக்கமாட்டார்கள் என்று தமிழக மீன் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான பீட்டர் தாஸ் கூறியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி தமிழக மீனவர்கள் 5 பேர் கடற்பரப்பில் கொல்லப்பட்ட சம்பவத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பின் கடற்புலிகள் பிரிவுக்கு சம்பந்தம் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தமிழக காவல்துறைத் தலைவர் டி. முகர்ஜி அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியும் தனது அதிர்ச்சியைத் தெரிவித்திருந்தார்.
இவை குறித்துக் கேட்கப்பட்டபோதே பீட்டர் தாஸ் இவ்வாறு பதிலளித்தார்.
இலங்கையில் விடுதலைப்புலிகள் மீதான அரசியல் அழுத்தம் அதிகரித்துவரும் சூழ்நிலையில், உலக அளவில் எந்தவொரு தமிழருக்கும் எதிராக விடுதலைப்புலிகள் இவ்வாறு எதிராகச் செயற்படமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை தமிழக மீனவர்களை விடுதலைப்புலிகளோ அல்லது இலங்கைத் தமிழர்களோ கொலை செய்திருக்க மாட்டார்கள் என்று இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
ஆயினும் ஒருவேளை விடுதலைப்புலிகளால் மீனவர்கள் கடத்தப்பட்டிருந்தால் அவர்களைப் பத்திரமாக மீட்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
BBC
Monday, April 30, 2007
தமிழக மீனவர்களை விடுதலைப்புலிகள் கொலை செய்திருக்கமாட்டார்கள் என்கிறார் மீனவர் சங்கத் தலைவர்.!!
Monday, April 30, 2007
1 comment
Subscribe to:
Post Comments (Atom)
இந்தியாவின் Q Branch சும்,RAW வும் செய்யும் அநியாயம் எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது.உண்மைகள் வெளிவர வேண்டியக் கட்டாயம் வந்துவிட்டது.
ReplyDeleteபார்ப்பன் வெறியாட்டம் இந்து பத்திரிக்கையின் தலையங்கத்தைப் பார்த்தால் தெரியும்.சிங்கள்க் கைக்கூலிகளான இவர்களின் முகமூடி கிழியத்தான் போகிறது.
அப்பாவி மக்களைக் கொன்றுகுவிக்கும் இனவாத அரசை ஆதரித்து இவர்கள் அடைய்ப்போவது என்ன?