Sunday, April 22, 2007

இலங்கை போர்க்களத்தில் வான்கலங்களின் பங்கு.

இலங்கையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் பின் மோதல்கள் உக்கிரமடைந்து 15 மாதங்கள் கடந்து விட்டன இந்த மோதல்கள் நடைபெற்ற காலப்பகுதியில் ஏறத்தாழ பல நூற்றுக்கணக்கான விமானத்தாக்குதல்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளன. தற்போதும் தமிழ் சிங்கள புதுவருடத்தின் பின்னர் தொடர்ந்து வன்னிப் பகுதிகள் மீது மிகை ஒலி விமானங்கள் இரவு பகலாக தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அதாவது வடபகுதியில் விடுதலைப் புலிகளின் பலத்தை சிதைப்பதற்கு இலங்கை அரசு தனது விமானப்படையை தான் பெரிதும் நம்பியுள்ளது. விடுதலைப் புலிகளின் வான்படை கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நள்ளிரவில் நடத்திய தாக்குதல் அவர்களின் இரவு நேர தாக்குதல் வலிமையை வெளிப்படுத்தியிருந்தது. அதன் பின்னர் இலங்கை விமானப்படையும் தனது இரவு நேர தாக்குதல் வலிமையை காட்டும் நோக்குடன் இரவு நேர தாக்குதல்களையும் பரா வெளிச்சக்குண்டுகளின் உதவியுடன் நடத்தி வருகின்றது. ஆனால் அது எவ்வளவு தூரம் இலக்குகளை சரியாக தாக்கும் என்பது கேள்விக்குறியே. ஏனெனில் விடுதலைப் புலிகளினால் குறிவைக்கப்படும் இலக்குகளும் இலங்கை விமானப்படையால் குறிவைக்கப்படும் இலக்குகளும் வேறுபட்டவை. மூன்றாம் ஈழப் போரில் தரைப்படையும் கடற்படையும் விமானப்படையும் சந்தித்த பெரும் இழப்புக்களை தொடர்ந்து எதிர்காலத்தில் ஏற்படும் போரை எதிர்கொள்ள அரசு தனது விமானப் படையை நவீனமயப்படுத்த எண்ணியது. அதன் தொடர்ச்சியாக கடந்த 10 வருடங்களில் இலங்கையின் விமானப்படை பெருமளவில் படைக்கல அதிகரிப்புக்களை செய்துள்ளதுடன் அதனை நவீனமயப்படுத்தியும் வந்துள்ளது. இந்த மிலேனியத்தின் முதல் மூன்று வருடங்களிலும் விமானப்படை 07 எம்.ஐ 35P 03 யுn-32இ 02 -130 மு ர்நஉரடநள ஊ1 06 மிக் - 27 ஆ 01 மிக் - 23 ருடீ 06 மு-8ளஇ 10 Pவு-6ளஇ 04 கிபீர் - ஊ 2இ 04 கிபீர் - ஊ7 போன்றவற்றை கொள்வனவு செய்திருந்தது. இது இன்றைய விமானப்படையின் பலத்தில் 30 விகித அதிகரிப்பாகும். மேலும் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையிலான போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்ட 2002 ஆம் ஆண்டு காலப்பகுதியை விமானப்படை தனக்கு மூச்சுவிடும் காலப்பகுதியாக பயன்படுத்தியிருந்தது. இந்த அவகாசத்தில் தனது படையை மீள ஒழுங்குபடுத்தியிருந்தது. புதிய விமானிகளுக்கு பயிற்சி அளித்ததுடன்இ பயிற்சி நடவடிக்கைகளையும் புதிய கொள்வனவுகளையும் முடுக்கி விட்டிருந்தது. கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற இராணுவத் தளபதி மீதான குண்டுத் தாக்குதலை தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் நாள் இலங்கையின் விமானப்படையின் 10 ஆவது ஜெற் ஸ்குவாட்ரன் சம்பூரில் மேற்கொண்ட வான் தாக்குதலுடன் அரசின் வான் தாக்குதல் மீண்டும் ஆரம்பித்திருந்தன. அதன் பின்னர் விமானப்படை எண் கணக்கற்ற தாக்குதல்களை தனது மிகை ஒலி விமானங்களின் மூலம் மேற்கொண்டு வருகின்றது. 1983 ஆம் ஆண்டு விடுதலைப் போர் ஒரு உக்கிர நிலையை அடைந்த போதும்இ 1991 ஆம் ஆண்டே இலங்கை அரசு மிகை ஒலி விமானங்களை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்தியிருந்தது. பின்னர் தனது போர் விமானங்களை நவீனமயப்படுத்துவதற்காக 1991 ஆம் ஆண்டு சீனாவிடம் இருந்து 02 ளூநலெயபெ குவு-5 01இ ஊரiணாழர குவு-7 04 ஊhநபெனர கு-7டீளு (இது மிக்-19 வகையின் பிரதி வடிவமாகும்) ஆகிய மிகை ஒலி விமானங்களை அரசு கொள்வனவு செய்திருந்தது. புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட இந்த விமானங்களை கொண்டு 05 ஆவது ஸ்குவான்ரன் பிரிவு 1991 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் நாள் அமைக்கப்பட்டு அது கொழும்பின் வடக்கில் உள்ள கட்டுநாயக்க வான்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. 1996 ஆம் ஆண்டு இஸ்ரேலிடம் இருந்து கிபீர் போர் விமானங்களை கொள்வனவு செய்யும் வரை இந்த விமானங்களே சமர்களங்களிலும்இ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வீச்சுக்களிலும் அதிகம் பயன்படுத்தப்பட்டது. 1995 ஆம் ஆண்டு ஜூலையில் விடுதலைப் புலிகளின் ஏவுகணைக்கு இலங்கை விமானப் படையின் புக்காரா குண்டு வீச்சு விமானம் உட்பட்டதை தொடர்ந்து இவற்றின் பயன்பாடு மேலும் அதிகரித்திருந்தது. எனினும் இவற்றின் அதீத பாவனையால் அவை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் தமது ஓய்வு நிலையை அடைந்து விட்டன. 1990 களின் இறுதிப் பகுதியில் அவை பயன்படுத்த முடியாத நிலையில் தரையில் நிறுத்திவைக் கப்பட்டிருந்ததுடன் மேலதிக மறுசீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது. இதே நேரம் கட்டுநாயக்க வான்பரப்பில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் 2000 ஆம் ஆண்டு கு-7 ரக விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியிருந்தது. குவு-5 ரக விமானங்கள் 500 மணிநேர பாவனைக்கு பின்னர் அல்லது 5 வருடங்களுக்கு பின்னரும்இ குவு-7 ரக விமானங்கள் 800 மணிநேர பாவனைக்கு பின்னர் அல்லது 8 வருடங்களுக்கு பின்னரும் புனரமைப்பு செய்யப்பட வேண்டும். இலங்கை அரசு பாகிஸ்தான் அரசுடன் மேற்கொண்ட உடன்பாட்டை தொடர்ந்து இந்த விமானங்களை மறுசீரமைக்கும் பணிகள் பாகிஸ்தானின் Pயமளைவயn யுநசழ யெரவiஉயட ஊழஅpடநஒ (Pயுஊ) இற்கு வழங்கப்பட்டது. 03 கு-7டீளுஇ 01 குவு-7இ 02 குவு-5 என்பன மேலதிக புனரமைப்பு வேலைகளுக்காக பாகிஸ்தானுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் 2005 ஆம் ஆண்டு இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. ஐந்து வருடங்கள் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த விமானங்கள் தற்போது கிபீர் விமானங்களுடன் ஆதரவு தாக்குதல் விமானங்களாக தரை தாக்குதலுக்கு பயன்படுத்தப்படுவதுடன் பயிற்சி நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இவை இரண்டாம் பட்சமாக வான் பாதுகாப்பையும் வழங்கக்கூடியவை. விடுதலைப் புலிகளிடம் விமானங்கள் இருப்பதும்இ விமான ஓடுபாதை இருப்பதும் அறியப்பட்ட பின்னர் அரசு தனது வான்பாதுகாப்பு நடைமுறைகளில் அதிகம் அக்கறை செலுத்தி வருவதும்இ நவீன ராடர்களை வாங்கி குவிப்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் கு-7 விமானங்களின் ஓய்வு நிலையை அடுத்தும்இ களத்தில் விமானப்படையின் தாக்குதல் விமானங்களின் தேவையை உணர்ந்தும் 1996 ஆம் ஆண்டு அரசு அமெரிக்காவின் அனுமதியுடன் இஸ்ரேலிடம் இருந்து கிபீர் விமானங்களை கொள்வனவு செய்தது. அதன் பின்னர் கிபீரே பிரதான போர் விமானமாக பயன்படுத்தப்பட்டும் வந்தது. கடந்த ஆண்டு ஏப்ரலில் அரசினால் ஆரம்பிக்கப்பட்ட வான் தாக்குதல்கள் தற்போது தினசரியான வான் தாக்குதல்களான உக்கிரமடைந்துள்ள நிலையில் கிபீர் விமானங்களே பிரதான பங்கு வகிக்கின்றன. 1996 ஆம் ஆண்டு 04 கிபீர் ஊ2 ரக விமானங்களையும்இ 01 கிபீர் வுஊ2 ரக விமானத்தையும் கொள்வனவு செய்திருந்த இலங்கை அரசு பின்னர் 2001 ஆம் ஆண்டு மேலும் 04 கிபீர் ஊ2இ 04 கிபீர் ஊ7 போன்றவற்றை கொள்வனவு செய்திருந்தது. இலங்கை அரசிடம் மூன்று வேறுபட்ட வகையான கிபீர் விமானங்கள் உள்ளனஇ கிபீர் ஊ2இ கிபீர் வுஊ2 (பயிற்சி விமானம்)இ 2001 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட நவீன தொழில்நுட்பமுடைய 04 கிபீர் ஊ7 என்பன உள்ளன. இந்த நவீன தொழில் நுட்பமுடைய கிபீரில் இரண்டு கிபீர் ஊ7 விமானங்கள் கட்டுநாயக்க தாக்குதலின் போது 2001 ஆம் ஆண்டு அழிந்து போனது. இதன் பின்னர் தனது பயிற்சித் தேவைகளுக்காக இலங்கை அரசு மேலும் ஒரு கிபீர் வுஊ2 வகை விமானத்தை 2001 ஆம் ஆண்டு டிசம்பரில் கௌ;வனவு செய்திருந்தது. இலங்கை அரசிடம் உள்ள 14 கிபீர் விமானங்களில் 02 கிபீர் ஊ7 நவீனரக விமானங்கள் கட்டுநாயக்க மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலிலும்இ 01 கிபீர் ஊ2 விமானம் 1997 ஆம் ஆண்டு நீர்கொழும்பு கடல் ஏரியில் வீழ்ந்தன. கடந்த ஆண்டு செப்ரம்பர் மாதம் 5 ஆம் நாள் விமான ஓடுபாதையில் இருந்து புறப்படும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் ஒரு கிபீரும்இ கடந்த ஆண்டு ஓக்டோபர் மாதம் 16 ஆம் நாள் கிழக்கிலங்கையில் தாக்குதலை நடத்திவிட்டு திரும்பி வரும்போது நீர்கொழும்பு கடலேரியில் ஒரு கிபீரும் (ஊ2) வீழ்ந்து நொருங்கியுள்ளன. இந்த மூன்று நிகழ்வுகளிலும் விமானிகள் உயிர் தப்பியிருந்தனர். அதாவது விமானப்படை தன்வசமுள்ள 12 தாக்குதல் கிபீர் விமானங்களில் 05 ஐ இது வரையில் இழந்துள்ளதுஇ இது கிபீர் விமானங்களின் 41 விகித இழப்பாகும். எனினும் களத்தின் விரிவாக்கம் கிபீர் விமானங்களை விட சிறிதளவு அனுகூலங்கள் கூடிய மிக் ரக விமானங்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு அரசை தள்ளியது. அதன் தெரிவாக மிக்-27டீ ரக தாக்குதல் விமானங்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இந்த விமானங்கள் கிபீர் விமானங்களை விட அதிக நிறையுள்ள குண்டுகளை காவுவதுடன்இ குறுகிய விமான ஓடுபாதையும் அதற்கு போதுமானது. எனவே அதிகளவு விமானத் தாக்குதல்களின் தேவையுள்ள வடமுனை போர்க்களத்தை இலகுவில் அடையக்கூடியவாறு இவை அனுராதபுர விமானப்படைத் தளத்தில் வைத்தும் பயன்படுத்தப்படலாம். 2000 ஆம் ஆண்டு 04 மிக்-27 ஆ ரக விமானங்களும்இ இரு இருக்கைகளை கொண்ட 01 மிக்-23 ருடீ விமானமும் கொள்வனவு செய்யப்பட்டதுடன் (ஸ்குவாட்ரன்-05) வான் படையின் தரை தாக்குதல் வலு மேலும் அதிகரித்திருந்தது. இவற்றில் மிக்-23 ருடீ பயிற்சி விமானமாகும். கொள்வனவு செய்யப்பட்ட பின்னர் இந்த விமானங்கள் மிகவும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருந்தன. மோதல்களின் அதிகரிப்பை அடுத்து அரசு மேலும் 02 மிக்-27ஆ ரக விமானங்களை அதே ஆண்டு கொள்வனவு செய்திருந்தது. மிகவும் அதிகளவான பாவனையால் அதன் ஓய்வு நிலையை வேகமாக அடைந்த இந்த விமானங்கள் நாலாம் கட்ட ஈழப்போரின் ஆரம்ப தாக்குதல்களில் பங்கெடுக்கவில்லை. மேலும் கொள்வனவு செய்யப்பட்ட 06 மிக்-27ஆ தாக்குதல் விமானங்களில் 03 விமானங்களை (அதாவது 50மூ) விமானப்படையினர் இழந்திருந்தனர். எஞ்சிய 03 விமானங்களும் மேலதிக மறுசீரமைப்பு வேலைகளுக்காக உக்கிரைனுக்கு அனுப்பப்பட்டது. 2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்க தாக்குதலில் ஒரு மிக்-27 விமானம் அழிந்ததுடன்இ அதே ஆண்டின் ஆகஸ்ட்டில் சீதுவை கடற்பரப்பில் ஒரு மிக்-27 ரக விமானம் வீழ்ந்து நொருங்கியது (இதில் உக்ரைன் விமானி கொல்லப்பட்டிருந்தார்). பின்னர் பயிற்சி நடவடிக்கையின் போது 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நீர்கொழும்பு கடல் நீரேரியில் ஒரு மிக்-27 வீழ்ந்து நொருங்கியது. எனினும் நாலாம் கட்ட ஈழப்போரில் மிக் விமானங்களின் அவசர தேவையை உணர்ந்த இலங்கை அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேலும் 04 மிக்-27 விமானங்களை கொள்வனவு செய்திருந்தது. இந்த வருடம் ஜனவரி மாதம் இலங்கையை வந்தடைந்த இந்த விமானங்கள் பெப்ரவரி மாதம் உத்தியோகபூர்வமாக விமானப்படையில் இணைக்கப்பட்டதுடன்இ பெப்ரவரி 04 ஆம் நாள் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது அது பொதுமக்களின் முன் தனது முதற்பறப்பை மேற்கொண்டிருந்தது. இதனிடையே 1990 களின் பிற்பகுதியில் தனது விமானப்படையை நவீனமயப்படுத்தும் அரசின் முயற்சியில் விமானிகளுக்கான பயிற்சிகளையும் இலங்கையில் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கென சீனாவிடம் இருந்து 6 Nயுஆஊ மு-8 முயசயமழசரஅள மற்றும் 10 யேnஉhயபெ Pவு-6 ரக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. 2001 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கையை வந்தடைந்த இந்த விமானங்களில் Pவு-6 ரக விமானங்களை கொண்டு ஸ்குவாட் ரன்-01 உருவாக்கப்பட்டு அனுராதபுரத்தில் நிறுத்தப்பட்டதுடன்இ மு-8 விமானங்களை கொண்டு ஸ்குவாட்ரன்- 14 உருவாக்கப்பட்டு கட்டுநாயக்க அதன் தளமாக்கப்பட்டது. இந்த விமானங்கள் மிக்இ கிபீர் போன்ற விமானங்களை ஓட்டக்கூடிய விமானிகளுக்கு பயிற்சி அளிக்கக் கூடிய விமானங்களாவதுடன்இ தரை மற்றும் வான் தாக்குதல்களுக்கும் பயன்படுத்தக் கூடியவை. அனுராதபுரத்தை தளமாக கொண்ட ஸ்குவாட்ரன்-01 இன் Pவு-6 ரக விமானம் ஒன்று கடந்த மார்ச் மாதம் பயிற்சி நடவடிக்கையின் போது அனுராதபுரத்தில் வீழ்ந்து நொருங்கியிருந்தது. மேலும் ஸ்குவாட்ரன்-14 இன் உத்தியோகபூர்வ வைபவத்திற்கு முதல் நாள் கட்டுநாயக்கா வான்படைத் தளம் விடுதலைப்புலிகளின் விசேட படைநடவடிக்கைக்கு உள்ளாகியதில் 03 மு8 விமானங்கள் அழிந்து போயிருந்தன. எனினும் பயிற்சி விமானங்களின் முக்கியத்துவம் உணர்ந்து இலங்கை அரசினால் இழக்கப்பட்ட விமானங்களுக்கான பதில் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. அவை 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் படையில் இணைக்கப்பட்டன. போக்குவரத்து விமானங்களை பொறுத்த வரையில் மூன்றாம் கட்ட ஈழப்போரில் அரசு அதிகளவான போக்குவரத்து விமானங்களையும்இ போக்குவரத்து உலங்கு வானூர்திகளையும் இழந்திருந்தது. போரில் தாக்குதல் விமானங்களைவிட கனரக போக்குவரத்து விமானங்களின் இழப்பு பல மடங்கு பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடியவை. ஏனெனில் அவற்றின் பெறுமதிகள் அதிகமாவதுடன்இ அவை வீழ்ந்து நொருங்கும் போது இழக்கப்படும் ஆள்இ ஆயுத தளபாட இழப்புக்களும் அதிகம். மேலும் அவற்றின் பற்றாக்குறை களமுனைகளில் படையினரை நகர்த்துவதுஇ காயமடைந்த படையினரை அகற்றுவதுஇ அவர்களுக்கான வழங்கல்களை மேற்கொள்வது என்பவற்றில் அதிக தாக்கங்களை உண்டு பண்ணும். உதாரணமாக 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வசாவிளானில் வைத்து அவ்ரோ விமானம் விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளான பின்னர் இலங்கை விமானப்படை 12 போக்குவரத்து விமானங்களையும் உலங்கு வானூர்திகளையும் இழந்துள்ளது. இவற்றில் இரண்டு அவ்ரோஇ 04 அன்ரனோவ் யுN-32இ 01 அன்ரனோவ் யுN-24இ இரண்டு லு8இ நான்கு ஆஐ-17 உலங்கு வானூர்திகள் என்பன அடங்கும். இவற்றின் இழப்புக்களின் போது 300 இற்கும் மேற்பட்ட படையினர் பலியாகியிருந்தனர் எனவே தனது போக்குவரத்து விமானங்களின் பலத்தை அதிகரிக்க பிரித்தானியாவிடம் இருந்து 02 ஹெக்கூல்ஸ் ஊ-130மு (நஒ - சுயுகு ர்நசஉரடநள ஊ1) கனரக சரக்கு விமானங்களை 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விமானப்படை கொள்வனவு செய்தது. இதன் மூலம் இரத்மலானையை தளமாக கொண்ட கனரக போக்குவரத்து ஸ்குவாட்ரன் 02 (ழே 2 ர்நயஎல வுசயnளிழசவ ளுஙரயசனழn) உருவாக்கப்பட்டது. இந்த விமானங்கள் விமானப்படையிடம் இருந்த சிறிய எண்ணிக்கையான அன்ரனோவ் யுN-32 மற்றும் சீனத் தயாரிப்பான ஒரு லு-8 (அன்ரனோவ் யுN-12 இன் பிரதி வடிவம்) என்பனவற்றிற்கு பெரும் பலத்தை அன்று சேர்த்திருந்தது. எனினும் இறுதியாக இருந்த லு-8 விமானமும் 2002 ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீழ்ந்து நொருங்கிவிட்டது. கொள்வனவு செய்யப்பட்ட ஹெக்கூல்ஸ் ஊ-130மு விமானங்களில் ஒன்று தனது ஓய்வு நிலையை அடைந்ததுடன்இ அது ஜோர்டானில் உள்ள யுநசழளியஉந ஊழஅpயலெ யின் உதவியுடன் மறுசீரமைக்கப்பட்டுஇ சுயபாதுகாப்பு சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது பெருமளவிலான படையினரை கொண்டுள்ள யாழ். குடாநாட்டின் வான் வழி வழங்கல் தளமான பலாலி விமானப்படைத் தளத்தின் ஓடுபாதை புனரமைப்புச் செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளது. அதற்காக பாகிஸ்தானின் உதவியும் நாடப்பட்டுள்ளது. எனவே அங்கு கனரக விமானங்களின் தரையிறக்கம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மாற்றீடாக தமது அவசியமான விநியோகங்களுக்கு உலங்கு வானூர்திகளையே இலங்கை வான்படையினர் பெரிதும் நம்பியுள்ளனர். இந்தப் பணிகளில் முக்கிய பங்கு வகிப்பது ஆஐ-17 ரக (ஸ்குவாட்ரன்-06) உலங்குவானூர்திகளாகும். எனினும் இலங்கை விமானப்படையிடம் பயன்படுத்தக் கூடியதாக உள்ள ஆஐ-17 ரக உலங்கு வானூஈர்திகளின் எண்ணிக்கை போதுமானதாக இருக்கவில்லை. அதை ஈடுசெய்யும் முகமாக தற்காலிக அடிப்படையில் இரு ஆஐ-17 உலங்குவானூஈர்திகளை தந்துதவுமாறு இந்திய அரசிடம் இலங்கை பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றது. அதேசமயம் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலையில் இலங்கை அரசினால் கொள்வனவு செய்யப்பட்ட இரு ஆஐ-17ஏ5 உலங்கு வானூர்திகளும் அதன் பலத்தை ஓரளவு ஈடுசெய்துள்ளன. இந்த உலங்குவானூர்திகள் ஹசன் உலங்குவானூர்திகள் (முயணயn ர்நடiஉழிவநச Pடயநெவ துளுஊ) தயாரிக்கும் தொழிற்சாலையில் தாயாரானவை. இது சாதாரண ஆஐ-17 உலங்கு வானூர்திகளை விட தரமானவை. தாக்குதல் உலங்குவானூர்திகளை பொறுத்த வரையில் 1995 ஆம் ஆண்டு நவம்பரில் வாடகைக்கு பெறப்பட்ட 03 ஆஐ-24 ர்iனௌஇ வகை உலங்குவானூர்திகளை கொண்டு ஸ்குவாட்ரன்-09 அமைக்கப்பட்டது. ஹிங்குரான் கொடவை தரிப்பிடமாக கொண்ட இந்த அணியில் இன்று ஒரு டசினுக்கும் மேற்பட்ட ஆஐ-24ஏ' hiனெ-நுள'இ ஆஐ-24P' மற்றும் ஆஐ-35P' hiனெ-குள' வகை உலங்குவானூர்திகள் உள்ளன. இந்த உலங்குவானூர்திகளின் இரவு நேர தாக்குதல் நடவடிக்கைகளை அதிகரிக்கும் முகமாக ஊழஅpயஉவ ஆரடவi-Pரசிழள யுனஎயnஉநன ளுவயடிடைணைந ளுலளவநஅள (ஊழுஆPயுளுளு) என்னும் தொகுதியை அரசு கொள்வனவு செய்திருந்தது. இது கண்காணிப்புஇ கண்டறிதல் போன்ற பணிகளை வான்இ கடல்இ தரைகளில் ஆற்றக்கூடியது. மேலதிகமாக இது பல வகையை சேர்ந்த பார்வைப்புல (ஏளைiடிநட) உணர்கருவிகளையும் லேசருடன் உள்ளடக்கியுள்ளது. இந்த தொகுதியில் தூரக்கணிப்புக்கள் (சுயபெந கiனெநசள) போன்றனவும் உண்டு. இவை தவிர 2001 ஆம் ஆண்டு நுடவய நுடுஃஆ-2160 ஆளைளடைந யுppசழயஉh றுயசniபெ ளுலளவநஅ என்னும் உபகரணங்களும் உங்கு வானூர்திகளின் சுய பாதுகாப்புக்கு என பொருத்தப்பட்டுள்ளன. மூன்றாம் ஈழப்போரில் இந்த உலங்கு வானூர்திகள் சந்தித்த இழப்புக்கள் கணிசமானவை. அதாவது 07 ஆஐ-24 ரக உலங்கு வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டும்இ வீழ்ந்து நொருங்கியும் அழிந்து போயிருந்தன. எனவே விடுதலைப் புலிகளின் வான்காப்பு படையணியின் அச்சம் காரணமாக நடந்து வரும் நாலாம் கட்ட ஈழப்போரில் தாக்குதல் உலங்குவானூர்திகளின் பயன்பாடு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டே உள்ளது. மிகை ஒலி விமானங்கள் மூலம் மிகவும் அதிக தொலைவில் இருந்து அல்லது மிகவேகமாக வந்து தாக்கிவிட்டுத் திரும்பும் உத்தியை தான் இலங்கை விமானப்படை கையாண்டு வருகின்றது. நன்றி: வீரகேசரி (22.04.07)

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.