Tuesday, March 27, 2007

சிறிலங்கா வான்படையினருக்கு பாரிய இழப்பு?

[செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2007] சிறிலங்காப் படையினரின் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நேற்று திங்கட்கிழமை தமிழீழ வான்படை நடத்திய தாக்குதலின் போது சிறிலங்கா வான்படைக் கலங்களுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற விபரம் தற்போது தெரியவந்துள்ளது. இத்தாக்குதலின் போது இரண்டு தாக்குதல் உலங்கு வானூர்த்திகள் மாத்திரமே சேதமடைந்தன என சிறிலங்கா அரசாங்க தரப்புத் தெரிவித்தாலும், தளப்பகுதி தொடர்ந்து தீப்பற்றி எரிந்ததாகவும் அப்பிரதேசம் புகைமண்டலமாக காட்சியளித்ததாகவும் உடனடியாக வெளிவந்த செய்திகள் தெரிவித்திருந்தன. இந்நிலையில் மேற்படி தளத்திலிருந்து தாக்குதலின் பின்னர் வீடுகளிற்குத் திரும்பிச் சென்ற வான்படையினர் குண்டுவெடிப்பின் போது விமானத் தரிப்புக் கொட்டகையில் ஏற்பட்ட தீயால் பெரும்பாலான ஜெற் குண்டுவீச்சு விமானங்கள் எரிந்து போனதை சிங்களப் பத்திரிகையாளர்களிற்கு உறுதிப்படுத்தியுள்ளனர். தங்களது வான்படைப் பலத்தில் 40 வீதம் இத் தீ விபத்தின் மூலம் குறைக்கப்பட்டுள்ளதாக மேற்படி வான்படையினர் தெரிவித்திருக்கின்றனர். கண்காணிப்புக் குழுவினர் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு வான்படைத் தளத்திற்கு செல்வதற்கு நேற்று இரு தடவைகள் முயன்ற போதும் வான்படை அதிகாரிகளினால் தடுக்கப்பட்டுள்ளனர். சம்பவ இழப்புக்களை படைத்தரப்பும் அரசாங்கமும் தம்மால் இயன்றளவு இருட்டடிப்புச் செய்து வருகின்ற போதும், இழப்புக்களை உறுதிப்படுத்துவது போல சிறிலங்கா அரச தலைவரும் அவசர அவசரமாகப் பாதுகாப்புச் சபையைக் கூட்டியுள்ளார். இத்தளத்தில் உள்ள வான் தரிப்பிடக் கொட்டகைக்குள்ளேயே கீபிர் வானூர்திகள் உள்ளிட்ட தாக்குதல் கலங்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதேவேளை மேற்படி தளத்திலிருந்து ஜெற் வானூர்திகள் ஏதும் பறப்பில் ஈடுபடவில்லை என்றும் ஆர்ஜன்ரினாத் தயாரிப்பான புக்காரா வானூர்திகள் இரண்டும் ஒரு கடல் விமானமுமே பறப்பில் ஈடுபட்டதாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. புதினம்.கொம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.