Thursday, March 29, 2007

முல்லைத்தீவு கடற்பரப்பில் 23 டோராப் படகுகள் அணி கடற்புலிகளால் விரட்டியடிப்பு

[வியாழக்கிழமை, 29 மார்ச் 2007]

முல்லைத்தீவு கடற்பரப்பில் 23 டோராக்களைக் கொண்ட அணியை கடற்புலிகள் தாக்கி, கடற்படையினருக்கு இழப்புக்களை ஏற்படுத்தி விரட்டியடித்துள்ளனர். இதில் கடற்படையினரின் இரு டோரா பீரங்கிப் படகுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

முல்லைத்தீவுக்கும் அளம்பிலுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் சிறிலங்காப் படையினரின் 23 டோராப் படகுகளைக் கொண்ட அணி கடற்பரப்பில் முன்னோக்கி வந்தன.

முன்னோக்கி வந்த டோராப் படகுகளின் அணிக்கு எதிராக கடற்புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதல், இன்று அதிகாலை 1 மணிவரை நீடித்தது. கடற்புலிகளின் தீவிர முறியடிப்புத் தாக்குதலில் இரு டோரா பீரங்கிப் படகுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இதனையடுத்து சிறிலங்கா கடற்படையினரின் ஏனைய டோராப் படகுகள், சேதமடைந்த படகுகளை இழுத்துக்கொண்டு பின்வாங்கி ஓடின.

டோராப் படகுகளின் அணியினை திருகோணமலை வரைக்கும் கடற்புலிகள் விரட்டியத்துள்ளனர்.

இம் முறியடிப்பச் சமரில் கடற்புலிகளின் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

இதனிடையே அளம்பில் கரையோரப் பகுதிகள் மீது சிறிலங்கா கடற்படையினர் செறிவான பீரங்கித் தாக்குதலை நடத்தி வருவதனால் அப்பகுதி கரையோர மக்கள் அவலப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க சிறிலங்கா வான் படையினரின் வானூர்திகள் நேற்று இரவு 9 மணியளவில் வன்னிப் பகுதியில் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.

தொடர்ச்சியாக தமிழர் தாயகப் பகுதிகள் மீது சிறிலங்கா வான்படையினர் தொடர் குண்டுத் தாக்குதலை நடத்தி வருவதுடன் தொடர் எறிகணைத் தாக்குதலையும் நடத்தி வருகின்றனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.