[திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2007]
"அரசின் ஆதரவுடன் கொழும்பில் இருந்து கதிர்காமம் வரை எமக்கெதிராக சுவரொட்டிகளை ஒட்டி, எம்மீது சேறடிக்கும் வேலைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக" முன்னாள் அமைச்சர் சிறீபதி சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
"எனக்கும் மங்கள சமரவீரவுக்கும் எதிராக மக்களை திசை திருப்பும் நோக்கத்துடனயே இப்படியான வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மங்களவும் நானும் மிகவும் கடுமையான துன்பத்துக்கு உள்ளாகியுள்ளோம் என்பது பொதுவான விடயம்.
ஆனால் எமக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவுகளை கண்டு அஞ்சுபவாகளே எமக்கு எதிராக சுவரொட்டி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். துறைமுகங்கள் அதிகார சபையைச் சேர்ந்த சில அதிகாரிகள் அதற்கு சொந்தமான வாகனங்களையும் சொத்துக்களையும் இந்த நடவடிக்கைக்கு பயன்படுத்தியுள்ளனர்.
நாட்டினதும் மற்றும் கட்சியினதும் நன்மைக்காக நாம் ஆரம்பித்திருக்கும் இந்த போராட்டத்தை இத்தகைய நடவடிக்கைகள் சீர்குலைத்து விடாது. நாம் ஒன்றைக் கூறிக்கொள்கிறோம். நாட்டின் சொத்துக்களை பயன்படுத்தி எம்மீது சேறடிப்பதை நிறுத்திவிட்டு எம்மால் சமர்ப்பிக்கப்பட்ட பத்து அம்ச கோரிக்கைகளில் கவனத்தை செலுத்துமாறு சம்மந்தப்பட்டவர்களை கேட்டுக்கொள்கின்றோம்" என்றார் அவர்.
Monday, February 19, 2007
'எம்மீது சேறடிக்கிறார்கள்': சிறீபதி சூரியராச்சி.
Monday, February 19, 2007





