Wednesday, October 02, 2013

இங்கிலாந்துக்கான இந்திய உயர் தூதராக ரஞ்சன் மத்தாய் நியமனம்

இங்கிலாந்துக்கான இந்தியாவின் புதிய உயர்தூதராக ரஞ்சன் மத்தாய் நியமிக்கப்பட்டுள்ளார்.

1974ம் ஆண்டின் ஐ.எப்.எஸ். பேட்ச் அதிகாரியான ரஞ்சன் மத்தாய் இதற்கு முன்னதாக இஸ்ரேல், கத்தார், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கான இந்திய தூதராக பணியாற்றியுள்ளார்.

1-8-2011 அன்று இந்திய வெளியுறவு துறை செயலாளராக பதவியேற்ற அவர் கடந்த ஜூலை மாதம் பணி ஓய்வு பெற்றார்.

இங்கிலாந்துக்கான இந்திய உயர் தூதராக பதவி தற்போது பதவி வகிக்கும் ஜெய்மினி பகவதியிடம் இருந்து ரஞ்சன் மத்தாய் விரைவில் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.