Sunday, October 13, 2013

தமிழர்களின் சுயாட்சியை வென்றெடுக்கும் ஆளுமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது என்கிறார் சிதம்பரம்

தமிழர்களின் சுய ஆட்சியை வென்றெடுக்கும் ஆளுமை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருப்பதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நிதி அமைச்சர் பி.சிதம்பரம் இதனை சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 25 வருடங்களின் பின்னர் நடத்தப்பட்ட வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி பெற்றது. 

இது வரலாற்று சாதனையாகவே கருதப்பட வேண்டும். இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் வழங்குகின்ற ஆதரவின் அடிப்படையில், தமிழர்களுக்கும், ஏனைய சிறுபான்மையினருக்குமான சுயஆட்சி, சுயகௌரவம், சமஉரிமை மற்றும் அதிகார பகிர்வு போன்ற விடயங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பால் விரைவில் பெற்றுக் கொடுக்க முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.