Tuesday, October 29, 2013

வடக்கில் பாதுகாப்பினை விஸ்த்தரிக்க வேண்டிய நிலையில் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றது - இராணுவத் தளபதி

வடக்கில் பாதுகாப்பினை விஸ்த்தரிக்க வேண்டிய நிலை காணப்படுவதாலேயே காணிகள் சுவீகரிக்கப்படுவதாக, இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். 

தென்னிலங்கயில் அதி வேக நெடுஞ்சாலைகள் நிர்மாணிக்கப்படும் போது, பொது மக்களின் காணிகள் சட்ட ரீதியாக கைகொள்ளப்பட்டதைப் போலவே வடக்கிலும் இடம்பெறுகிறது. 

வடக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகளை விஸ்த்தரிக்க வேண்டிய நிலைமை காணப்படுதால், முகாம்களையும் பெரிதாக்க வேண்டிய தேவை காணப்படுகிறது. இந்த நிலையில் சட்ட ரீதியாகவே குறித்த காணிகள் கையகப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.