Tuesday, September 24, 2013

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் நடவடிக்கைக்கு மீனவ சங்கங்கள் வரவேற்பு!


இலங்கை இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு தமிழக மீனவ சங்கங்கள் தமது வரவேற்பினை வெளிப்படுத்தியுள்ளன.

இது தொடர்பாக இருநாட்டு மீனவர்களின் பிரதிநிதிகளும், சென்னையில் கூடி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக முதல்வர் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் தொடர்பை ஏற்படுத்தி எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழக மீனவ சங்கங்களின் சமாஜ தலைவர் யூ.அருளானந்தம் நன்றி தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.