Wednesday, July 31, 2013

யாழில் படைப்பிரிவுகள் வெளியேறிய முகாம்களுக்கு மூடுவிழா! பொதுமக்களின் வீடுகளை கையளிக்க ஏற்பாடு


யாழ்ப்பாணத்திலுள்ள படை முகாம்களை மூடிவிட்டு அப்பகுதியில் நிலைகொண்டிருந்த படைப்பிரிவுகள் வெளியேறிச் செல்லவுள்ளன.
இராணுவத்தின் 51வது படைப்பிரிவின் படைமுகாம்களே இவ்வாறு மூடப்படவிருக்கின்றன. இதற்கான ஆயத்த நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக 511வது பிரிகேட் படைமுகாம் மற்றும் 512வது பிரிகேட் படைமுகாம்களே மூடப்பட்டு அப்படைமுகாம்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படவிருக்கின்றன.
இந்த படைமுகாம்கள் அமைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் வீடுகளும் காணிகளும் மீண்டும் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவிருக்கின்றன.
இதற்கான நடவடிக்கைகளை படை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 511வது, 512வது படைமுகாம்கள் அமைந்திருந்த வீடுகள் குறித்த பிரிவு இராணுவ அதிகாரிகளால் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நாளைமறுதினம் நடைபெறவுள்ளது.
இதன்படி 511வது படைமுகாம்கள் இருந்த ஊரெழு, அச்செழு பகுதி பொதுமக்களின் வீடுகளை கையளிக்கும் நிகழ்வு அன்றைய தினம் காலை 10.00 மணிக்கு யாழ்.தேசிய கல்வியியற் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
512 வது படைமுகாம்கள் இருந்த கொழும்புத்துறை, சுவாமியார் வீதி மற்றும் அரியாலை பகுதியிலுள்ள பொதுமக்களின் வீடுகளை கையளிக்கும் நிகழ்வு அன்றைய தினம் அரியாலையிலுள்ள 512வது படைமுகாமிலும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.