Wednesday, March 13, 2013

புதுச்சேரியில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் – காவல்துறையுடன் தள்ளு முள்ளு



இந்திய பூரான்கள் இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மாணவர் கூட்டமைப்பு, கிராமப்புற மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், செந்தமிழர் இயக்கம், உயிர்கள் மற்றும் பசுமை பாதுகாப்பு இயக்கம், ஆகியவைகள் இணைந்து இன்று காலை 11 மணியளவில் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம், தபால் நிலையம் ஆகியவற்றை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது.

புதுச்சேரி அரசு உடனடியாக இலங்கை அரசுக்கு பொருளாதாரத் தடை விதிக்க வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டி இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் மத்திய அரசுக்கும் , புதுச்சேரி அரசுக்கும் எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பலத்த போலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தள்ளு முள்ளு ஏற்பட்டது பிறகு ஆசிரமம் தபால் துறையில் அத்துமீறி நுழைந்த 17 பேரை பெரியக்கடை காவல்துறையினர் கைது செய்தனர். இரண்டு பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் பூரான்கள் இயக்கம் வீ. போன்ஸ் ரமேஷ், பாரதி இளந்திரியன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வீரமோகன், இளங்கோ, சுரேஷ், காளிதாஸ், மாணவர் கூட்டமைப்பு சு.சி.சாமிநாதன், கிராமப்புற மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் பெ.சந்திரசேகரன், செந்தமிழர் இயக்கம் நா.மு.தமிழ்மணி, இராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.pu
pu1
pu2
puu

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.