Saturday, March 23, 2013

மீண்டும் ஒரு இசைப்பிரியாவா ? உடனே காப்பாற்ற முடியுமா ?

இலங்கையில் இறுதிப் போரின் பின் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன அழிப்பு நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக தமிழர் பிரதேசத்தில் இருந்து தமிழ் மக்கள் வேற்று நாடுகளுக்கு வெளியேறிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு கடல்வழியாக 45 பேர் படகில் சென்றனர். குறித்த படகு நடுக்கடலில் பழுது பட்டதையடுத்து ...டுபாய் அரசுக்கு சொந்தமான படகு இலங்கை பயணிகளை மீட்டு தமது நாட்டில் வைத்து சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்துள்ளது. இதில் 7 பேருக்கு வெளிநாட்டு விசா வழங்கப்பட்டது. மேலும் 7 பேர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர். மீதமுள்ள 31 பேரையும் தற்போது இலங்கைக்கு நாடு கடத்த டுபாய் அரசு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதில் தமிழீழ ஊடகவியலாளர் பெண் ஒருவரும் அடங்குவர்.

இறுதிப்போரில் அரச படையிடம் சரணடைந்த ஊடகவியலாளர்கள் இசைப்பிரியா மற்றும் அகழ்விழி போன்றோர் மிகக் கொடூரமாகச்சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே இந்த பெண் ஊடகவியலாளரையும் சிறிலங்காவுக்கு நாடு கடத்தினால் , இசைப்பிரியாவுக்கு ஏற்பட்ட கொடுமையே இப் பெண்ணுக்கும் ஏற்படலாம். கவே குறித்த பெண் ஊடகவியலாளர் உட்பட தஞ்சம் கோரிவந்த அனைத்து தமிழ் மக்களுக்கான பாதுகாப்பையும் சர்வதேச அமைப்புக்கள் வழங்க வேண்டும் எனக் கோருவதுடன் இச் செய்தியை ஊடகங்கள் கவனத்தில் எடுத்து உரிய பொறுப்பு வாய்ந்த தரப்புக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் கோரப்படுகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.