Tuesday, March 19, 2013

நாங்களும் விலகுறோம்… திருமாவளவனும் அறிவிப்பு (காணொளி இணைப்பு)



ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து நாங்களும் வெளியேறுகிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இத்தனை ஆண்டுகாலமாக இலங்கைத் தமிழர்கள் மீது இல்லாத பாசம் இப்போது மத்திய அரசின் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திமுக, வி.சி. கட்சித்தலைவர்களுக்கு வந்துள்ளது. 

மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோரி நாங்கள் வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என்று ஐ.மு கூட்டணியில் இருந்து திமுக விலகியுள்ளது. இதே காரணத்திற்காக தற்போது நாங்களும் கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். மத்திய அரசின் ஆதரவை வாபஸ் பெற்றுள்ள வி.சி கட்சி சார்பில் ஒரு உறுப்பினர் மட்டுமே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.