Thursday, November 08, 2012

பாரிசில் சிங்கள கைக்கூலிகள் கொலைவெறியாட்டம்! தேசிய செயற்பாட்டாளர் பருதி வீரச்சாவு

பாரிசில் சிங்கள அரசின் கைக்கூலிகள் எனக் கருதப்படும் தேசவிரோதிகள் நிகழ்த்திய கொலைவெறித் துப்பாக்கிச் சூட்டில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினரும், தேசிய செயற்பாட்டாளருமான பருதி (நடராஜா மதீந்தரன்) அவர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார்.

இன்று மாலை பாரிசில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலகத்திற்கு முன்பாக இக் கொலை வெறித்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

1996 ஒக்ரோபர் மாதம் 26ஆம் நாளன்று பாரிஸ் லாச்சப்பலில் இடம்பெற்ற லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின் படுகொலையின் பாணியில் தற்பொழுது பருதி அவர்களின் படுகொலை இடம்பெற்றிருப்பதாக சங்கதி-24 இணையத்திற்கு தெரிய வருகின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதேயிடத்தில் பருதி அவர்கள் மீது வாள்வீச்சை தேசவிரோதிகள் நிகழ்த்தியமை நினைவூட்டத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.