Thursday, November 15, 2012

ஐ.நா.சபை சிறீலங்காவில் விட்ட தவறுகளை, எதிர்வரும் காலங்களில் மீண்டும் விடக்கூடாது - கொலம் மெக்ரே

ஐ.நா.சபை சிறீலங்காவில் விட்ட தவறுகளை, எதிர்வரும் காலங்களில் மீண்டும் விடக்கூடாது என்ற உறுதியை வழங்க வேண்டும். சிறீலங்கா அரசு திட்டமிட்டே போரை நடத்தியது. இதனால் போர் வலயத்தில் இடம்பெற்ற துன்பியல் சம்பவங்கள் வெளிவராது போயின என்று சனல் 4 செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை சிறீலங்கா அரசு ஆரம்பிக்கும் போது, இந்த செயற்பாடுகளுக்கு சாட்சியங்களை இல்லாது செய்யும் பணிகளையும் திட்டமிட்டு நடத்தியது. அதன் அடிப்படையிலேயே வடக்கில் இருந்து ஊடகங்கள் முதற்கட்டமாக வெளியேற்றப்பட்டன.

சர்வதேச ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டன. அதன்பின்னர் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் வெளியேற்றப்பட்டன.

இந்த நிலையிலேயே ஐக்கிய நாடுகள் சபையும் அங்கிருந்து விலகிக் கொண்டது. இதன்மூலம் இறுதிப்போரின்போது பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் வெளிவராது போயின என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் நடைபெறாதிருக்கவும், ஐக்கிய நாடுகள் மீதான நம்பிக்கை பேணப்படவும், ஐக்கிய நாடுகள் சபை அதற்கு ஈடான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கேட்டுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.