Thursday, June 28, 2012

மனித மலங்களை ஊற்றி கொடுமை செய்யும் இலங்கை இராணுவம் !

மனித மலங்களை வாளியுடன் ஊற்றி கொடுமை செய்யும் இலங்கைப் படைகளின் அதி உட்ச அராஜகம்:- தமிழ் அரசியல் கைதியின் வாக்குமூலம்:-

வவுணியா சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளின் அவலம் தொடர்கிறது. நீதிமன்றங்களின் உத்தரவுகளை உதாசீனம் செய்து அடாவடித்தனம் புரியும் பாதுகாப்பு அமைச்சு ! அரசியல் கைதி சரவணபவன் எங்கே? ஆவரை எம் முன் நிறுத்தும் வரை எமது அகிம்சைப் போராட்டம் தொடரும் என்கின்றனர் கைதிகள் !

வவுனியா சிறைச்சாலையில் 31 அரசியல் கைதிகள் இருக்கின்றோம். பத்திரிகைகளில் வந்த செய்திகள் மக்களுக்கு காட்டும் விதத்தில் மிகபை;படுத்தப்படுத்தி வந்துள்ளது. சில சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றது. அது அகிம்சை ரீதியில்தான் நடந்திருக்கு. அரசியல் கைதிகள் இதுவரையில் அகிம்சை ரீதியில்தான் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். எந்த விதக் காரணம் கொண்டும் நிர்வாகத்தின் செய்றபாடுக்ளை நிறுத்தவோ முடக்கவோ நாங்கள் போகவில்லை என சிறையில் இருந்து சிறைக் கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் 25ம்திகதி மாலையளவில் சரவணபவன் என்ற சக அரசியல் கைதி ஒருவரை அனுராதபுரம் பகுதியிலுள்ள நீதிமன்றம் ஒன்றின் வழக்கின் பிரகாரம் அனுரபாதபுரம் சிறைச்சாலைக்கு இங்கிருந்து மாற்றினார்கள். இடம்மாற்றிய வேளை அவருக்கு அங்கிருந்த குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட கைதிகளுடன் சில முரண்பாடுக்ள ஏற்பட்டன. அதாவது நாங்கள் இங்கு எமது விடுதலை கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவதால் அது தொடர்பில் அவர்களுடன் கருத்து முரண்பாடு இருக்கின்றது. அதையும் அனுராதபுரம் காவற்துறை அத்தியட்சகருக்கெதிராக ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையும் பயன்படுத்தி சரவணபவனை தனது அலுவலகத்தில் வைத்து கிரிக்கட் விக்கட்டுக்களால் காவற்துறை அதிகாரி அடித்திருக்கின்றார்.நாங்கள் உறுதிப்படுத்திக் கொண்டோம்.

சிறைச்சாலைக்கு பொறுப்பானவருக்கு முன்பாக அவரது அடிவருடிகள் எனச் சொல்லப்படுகின்ற 02 கைதிகள் அவர்மீது மனித மலங்களை வீசியிருக்கின்றனர். ஒரு தடைவ அல்ல 3 , 4 தடவைகள் வீசியிருக்கினம். அறைக்குள் அடைத்து வைத்து விட்டு கதவு கம்பிக்களுக்குள்ளால் கிட்ட வரச்சொல்லிப் போட்டு வாளியால் அள்ளி ஊற்றியிருக்ப்ன்றார்கள். இதனை அந்த காவற்துறை அதிகாரி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பார்த்து விட்டுப் போயிருக்கின்றார். சரவணபவன் எவ்வாறு மண்றாடிக் கேட்டும் அவரை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லவில்லை. மறுநாள் காலையில் அவரைக் குளிக்கவும் விடாமல் சாப்பாடும் கொடுக்காமல் அறையில் வைத்திருக்கின்றார்கள்.

மறுநாள் காலையில் அவன் காலில் விழுந்து குழறியதை அடுத்து ஏனைய அதிகாரிகளின் உதவியுடன் காவற்துறை அதிகாரியுடன் அவரது அலுவலகத்தில் போய்க் கதைத்த பின்பும் உடைகளும் மாற்றப்படாமல் அதே உடையுடன் அவனை அடித்ததுடன் மீண்டும் சிறையில் போட்டு அடைத்திருக்கின்றார்கள். இப்ப இந்தக் கைதி எங்கிருக்கின்றார் என்ற தகவல்களே இல்லை. அவர் தனது நீதிமன்ற வழக்குகளுக்கு போனாரா அல்லது போகவில்லையா என்பது கூட தெரியவில்லை. எந்த அதிகாரிகளிமும் இது பற்றிக் கேடட்டால் அவர்கள் அதுபற்றிக் கதைக்க மறுக்கின்றார்கள் என சிறையில் இருந்து சிறைக் கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.