Thursday, April 12, 2012

தமிழீழத்தில் சிங்களம் கட்டாய பாடமாகிறது

இலங்கை அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மும்மொழி கொள்கைத் திட்டத்தின் ஊடாக, தமிழீழத்தில் தமிழ் மாணவர்களுக்கு, சிங்கள மொழியினைக் கட்டாயப்பாடமாக்க இலங்கை அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்ன.

தமிழர்களை அவர்களது நாட்டிலேயே அகதிகளைப் போல வாழ வைத்துள்ள இலங்கை அரசு, தமிழர்களின் பகுதிகளில் புத்தர்சிலைகளை அமைத்து பௌத்தமயமாக்கலையும், தமிழர்கள் வாழ்ந்த நிலப்பகுதிகளில் ராணுவ முகாம்கள் அமைத்து ராணுவமயமாக்கலையும் செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது தமிழ் மாணவர்களுக்கு சிங்களத்தை கற்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி சிங்களமயமாக்கலையும் தீவிரப்படுத்யுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.