வவுனியா வடக்கு இளமருதங்குளம் கார் மேல் மாதா தேவாலயத்தினுள் புகுந்த இராணுவத்தினர் அங்கிருந்த திருச் சொருபங்களை வெளியே வீசி அதனை அசிங்கப்படுத்தியிருக்கின்றனர்.
தேவாலயத்தினுள் புகுந்து அங்கிருந்த மாதாவின் திருச் சொருபத்தினை அகற்றி வெளியே கொண்டு சென்று வைத்து, அதன் மீது நீர் ஊற்றி அசிங்கப்படுத்தப்பட்டிருக்கின்றது.
கடந்த இரவு இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளமையால் அந்தப் பகுதி கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு நிலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து மன்னார் ஆயர் விடுத்த வேண்டுகோளின் எதிரொலியாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றது.
இளமருதங்குளம் சம்பவம் குறித்து நேரில் ஆராய்வதற்கான ஆயர் தலைமையிலான குழுவினர் அங்கு சென்றிருக்கின்றனர். ஆலயச் சூழலில் இராணுவ அதிகாரிகள், பொலிஸார், மதகுருமார் மக்கள் எனப் பெருமளவானோர் திரண்டிருப்பதாக அங்கிருந்து மக்கள் தெரிவிக்கின்றனர்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.