Monday, February 13, 2012

பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகியது!

புத்தளத்தில் விமானப்படைக்கு சொந்தமான மிக் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக விமானப்படைத் தலைமையகம் அறிவித்துள்ளது. மாரவில் தும்புல்ல சூரிய பிரதேசத்தில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான எம் ஜ 27 ரக விமானமே இன்று மதியம் 1.35 மணியளவில் விபத்துக்குள்ளாகியதாக விமானப்படை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
கட்டு நாயக்கா விமான நிலையத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்ற போதே குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் குறித்த விமானத்தில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விமானி பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாரவில் பிரதேசத்தில் இருந்து 17 மைல் தூரத்தில் இந்த விபத்து இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.