Saturday, January 21, 2012

டென்மார்க்கில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் அரங்கம்:

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் அரங்கம் நிகழ்வு டென்மார்க்கின்ற நகரில் இடம்பெறவுள்ளதாக தகவற்றுறை அமைச்சகத்தின் ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22-01-2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 15:30 மணிக்கு Industrivej 15A / 7200 Grindsted எனும் முகவரியில் இடம்பெறுவதாக ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமகால அரசியல் நிலைவரம் மற்றும் நா.த.அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்தான விழிப்பூட்டல் நிகழ்வாக இடம்பெறவுள்ள இப்பொதுக் கூட்டத்தில் நா.தஅரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள் கலந்து கொள்கின்றார்.

உள்துறை அமைச்சின் டென்மார் பிரதிநிதி இளையராஜா சிதம்பரநாதனின் ஒழுங்குபடுத்தலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் அரங்கம் நிகழ்வில் அனைவரையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.