
2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் மாநாட்டில், இலங்கைக்கு எதிராக போர் குற்றங்களை சுமத்த இரண்டு நாடுகள் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது. இந்த நிலையில், ஏழு நாடுகளில் உள்ள 40 போர் குற்றவாளிகள் தொடர்பான விபரங்களை இலங்கை புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்து உள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
புலிகளின் சில போர் குற்றவாளிகளை கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரங்களின் அதிகாரிகள் தமது வாகனங்களில் அழைத்துச் சென்று, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இறக்கி விட்டு, அவர்கள் வெளிநாடு செல்ல உதவியிருப்பதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. சர்வதேச காவற்துறையினர், இந்த போர் குற்றவாளிகளை கைது செய்ய பிடிவிறாந்து பிறப்பித்துள்ளபோதிலும், அந்தந்த நாடுகள், அவர்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அது தெரிவித்துள்ளது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.