Friday, June 17, 2011

அகதிகள் கொழும்பை வந்தடைந்தார்கள்! உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படவில்லையாம்

பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் சற்றுமுன்னர் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

சுமார் 58 இலங்கை அகதிகள் பிரித்தானிய எல்லை முகவரக விமானமான PVT-03 என்ற சிறப்பு விமானத்தின் மூலம் கொழும்பை வந்தடைந்துள்ளனர்.

பிரித்தானியாவில் இருந்து அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட அகதிகளை உடனடியாக விமானநிலையத்தில் கைது செய்யப்படமாட்டார்கள். அதற்கான உத்தரவுகள் எதுவும் தமக்கு வழங்கப்படவில்லை என்று குற்ற விசாரணைத் திணைக்களத்தின் பணிப்பாளர் விஜய அமரசிங்க இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை வந்துள்ள 38 தமிழர்களும் விசாரணைக்கென தேசிய இரகசிய விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடிகயல்வு திணைக்களக் கட்டுப்பாட்டாளர் சூலனந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.