Friday, June 17, 2011

சிங்களவரை வந்தேறு குடிகள், கூலிப் படைகளின் வாரிசுகள் என்கிறார் வரலாற்று அறிஞர்

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து வந்து இலங்கையில் குடியேறியவர்களின் வாரிசுகள்தான் இன்றைய சிங்களவர்கள் என்று கூறுகின்றார் தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரபல வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா.

இந்தோ ஆசிய தொல்பொருள் ஆய்வு மையம் சென்னையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே வரலாற்று ஆய்வாளர் முத்தையா இவ்வாறு தெரிவித்தார்.

இவர் அங்கு மேலும் பேசுகையில் முதலாம் பராக்கிரமபாகு, ஆறாம் பராக்கிரமபாகு ஆகிய அரசர்கள் சேர நாட்டில் இருந்து கூலிப் படைகளை வரவழைத்து இருந்தனர்.

இக்கூலிப் படைகளை சேர்ந்தவர்கள் இலங்கைப் பெண்களை திருமணம் செய்து நிரந்தரமாக தங்கி விட்டனர், இன்றைய சிங்களவர்கள் இக்கூலிப் படைகளின் வாரிசுகளாகத்தான் இருக்க வேண்டும், இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன, சேர நாடு என்பது தற்போதைய கேரளா, தூத்துக்குடி மற்றும் நாகர் கோவில் ஆகிய இடங்களை கொண்டு இருந்தது என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.