Wednesday, June 15, 2011

இலண்டனில் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தபடவுள்ள தமிழர்கள் நிறுத்தபட வேண்டும்: சனல் 04

இலங்கையில் இருந்து யுத்தம் காரணமாக இலண்டன் வந்து அகதி அந்தஸ்த்து மறுக்கப்பட்ட தமிழர்கள் நாடுகடத்தப்படுதல் நிறுத்தபட வேண்டும் என்று சனல் 4 தொலைக்காட்சி இன்று கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு இந்த வாரம் சுமார் 40 இலங்கை தமிழர்கள்வரை நாடுகடத்தபட உள்ளனர் எனவும் தொடர்ந்தும் பலர் கடத்தப்பட உள்ளதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் இவர்கள் நாடுகடத்தப்பட்டால் இலங்கையில் அவாகள் மேன் மேலும் துன்புறுத்தபடலாம் என சனல் 4 தொலைக்காட்சி இன்றய தனது செய்தியில் தெரிவித்துள்ளது. இதே நேரம் பிரித்தானிய குடிவரவு திணைக்களம் தமிழர்களின் இரகசியங்களை இலங்கை அரசிற்கு கசிய விட்டுள்ளதாகவும் அத்தொலைக்காட்சி சுட்டிக்காட்டபட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.