Saturday, November 27, 2010

மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னெடுக்க உலகப் பரப்பெங்கும் வாழும் உலகத்தமிழனம் தயாரகி வருகின்றது:

அமெரிக்கா முதல் ஒஸ்றேலியா வரையிலான சகல கண்டங்களிலும் 23க்கும் மேற்பட்ட நாடுகளில் மாவீரர் நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றது. தமிழர் தாயகம் எங்கும் சிறிலாங்கா படையினர் மிகவும் விழிப்பு நிலையில் இருப்பதோடு மாவீரர் நாளோட தொடர்பட்ட செய்திகளை வெளியிட வேண்டாம் என்ற எச்சரிக்கையும் ஊடகங்களுக்கு விடப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் தமிழர்தாயகம் எதிர்கொண்டுள்ள சிங்கள் பேரினவான அடக்குமுறையை புலம் பெயர் தமிழர் சமூகம் நெஞ்சினில் சுமந்த வண்ணமே மாவீரர் நாள் ஏற்பாடுகளை முன்னெடுத்த வருகின்றனர்.

ஏற்கனவே மாவீரர் குடும்பங்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகளும் மாவீரர் நாளையொட்டிய நிகழ்வுகளும் சிறப்புற ஏலவே நடந்து முடிந்து விட்டன. இதேவேளை தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள மாவீரர் கல்லறைகள் ஒரு இனச்சுத்திகரிப்பின் அங்கமாக உள்ள நிலையில் இதனை கருவாக கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனஒழிப்பு, போர்குற்றங்கள் குற்றவிசாரணைக்கும், தடுப்புக்குமான அமைச்சகமும் - roehampton பல்கலைக்கழக மனித உரிமைகள் மையமும் இணைந்து நடாத்துகின்ற ஆய்வரங்கமும் பலரது கவனத்தைப் பெற்றுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.