உலக கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரை இறுதிப் போட்டியில் நெதர்லாந்து-உருகுவே அணிகள் மோதுகின்றன.
நெதர்லாந்து அணிக்கெதிரான அரையிறுதிபோட்டியில் நெதர்லாந்தின் முன்கள வீரரான ஆர்ஜன் ரோபனை தடுப்பதற்காக திட்டத்தினை உருகுவே அணியின் பயிற்சியாளரான ஒஸ்கார் டெபோரஸ் தீட்டியுள்ளதாக அவ்வணியின் வீரர் செபஸ்தியான் அகேரு தெரிவித்துள்ளார்.
உபாதைகள் காரணமாக உலக்கிண்ண முதல் சுற்றுப்போட்டிகளில் விளையாடவில்லை. ரோபன் இரண்டாம் சுற்றில் லோவாக்கியா அணிக்கெதிரான போட்டியிலேயே தமது ஆட்டத்தினை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலக்கிண்ணத்தை முதல் முறையாக கைப்பற்ற எதிர்பார்க்கும் நெதர்லாந்து அணியில் ரோபன் முக்கிய வீரராக கருதப்படுகிறார். பொடாபோகா கழக அணிக்காக விளையாடிவரும் அபேரு உருகுவே அணியின் முக்கிய வீரராக கருதப்படுகிறார். கானா அணிகெதிராக அவர் பெற்ற கோலானது அவ்வணியின் வெற்றிக்கு வழிவகுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1970ம் ஆண்டுக்கு பிறகு உருகுவே அரையிறிதிப் போட்டியொன்றில் நுழைவது இதுவே முதல் முறையாகும்.உருகுவே அணி கிண்ணத்தினை இதுவரை இரண்டு தடவை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது , , ,







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.