புலம்பெயர்ந்த நாடுகளில் வெற்றிகரமாக இடம்பெற்ற நாடுகடந்த அரசாங்கத்தின் தேர்தலையடுத்து சிறலங்கா அரசாங்கம் பீதியடைந்துள்ளதாக நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் வெளிப்பாடாகவே சிறீலங்கா அரசாங்கம் அது சட்டவிரோதமானது என அறிவித்துள்ளது.இதுதொடர்பில் சிறீலங்கா அரசாங்கம் விடுத்துள்ள செய்தியில் இது புலிகளின் நடவடிக்கைகளுக்கு உயிர்கொடுக்க முயல்வதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது.
நாடுகடந்த அரசாங்கத்தில் 135 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளார்கள் என்பதுவும் கனடாவில் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளது தெரிந்ததே.
கனடாவில் பெருமளவில் மக்கள் வாக்களித்ததே இவ்வாறு சிறீலங்கா அரசை அச்சமடைய வைத்துள்ளதாகவும் இதனையடுத்தே கனடாவிற்கான இலங்கை தூதுவர் சித்திராங்கனி வாகிஸ்வரா இக்கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.