இலங்கையில் ஒழிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் கனவுகளையும், ஆசைகளையும் நிறைவேற்றுவதற்கு துடிக்கும் பலர் பல நாடுகளிலும் இன்னும் செயற்படுவதாக பெற்றோலிய வள அமைச்சர் சுசில் பிரமஜயந்த குறிப்பிடுகின்றார்.இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய விருது வழங்கும் விழாவை நடத்தும் அந்த அமைப்பின் தலைவரும் நடிகருமான அமிதாப் பச்சானின் வீட்டின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையும் இதன் ஒரு கட்டமாகவே பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் மகாவலி கேந்திர நிலையித்தில் இன்று மாலை இடம்பெறற் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் பெரிய நபர்கள் அல்ல எனவும், இவ்வாறான ஆர்ப்பாட்டங்களினால் இலங்கையில் நடைபெறவுள்ள அந்த நிகழ்விற்கு எதுவித பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் கூறினார்.
ஆர்ப்பாடம், போராட்டங்களை யாரும் மேற்கொள்ளலாம் என குறிப்பிடும் அவர், எமக்கும் பல ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள முடியும் எனவும் கூறினார்.
இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதன் மூலம் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி, விடுதலைப் புலிகளின் கனவுகளை நனவாக்கத் துடிக்கும் பலர் இன்னும் செயற்படுவதை உணரமுடிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.