கடந்த 14-03-2010 அன்று ஈபிடிபி அமைப்பிரால் கடத்தப்பட்ட கபில்நாத் அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்ட பின்னர் கழுத்து நெரித்துப் படுகொலை செய்யப்பட்ட பின்னர் வாழைத் தோட்டம் ஒன்றில் புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் செய்திகள் வெளியாகியுள்ளது.அப்பாவி மாணவனான கபில்நாத் அவர்கள் கொலை வெறியர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவத்தினை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இப் படுகொலையுடன் தொடர்புடய ஈபிடிபி அமைப்பு நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்படல் வேண்டும்.
கடந்த காலத்தில் மகிந்தராஐபக்சவின் ஆட்சிக்காலத்தில் அரச படைகளுடன் இணைந்து பெருமளவான அப்பாவிப் பொது மக்களை கடுத்திப் படுகொலை செய்யும் செயற்பாடுகளில் ஈடுபட்ட வந்த ஈபிடிபி அமைப்பு இன்னமும் தனது கொலைக் கலாசாரத்தினை நிறுத்தவில்லை.
துணை இராணுவக் குழுவான ஈபிடிபி அமைப்பானது சலுகைகளுக்காகவும், பதவிக்காகவும், தமிழ் மக்களின் பேரம்பேசும் சக்தியான விடுதலைப் புலிகள் அமைப்பை காட்டிக் கொடுத்து அதனை அழித்து தமிழ் மக்களை சிங்கள தேசத்தின் அடிமையாக்குவதில் பெரும் பங்குவகித்துள்ளது. இன்று கேட்பதற்கு யாருமற்ற நாதியற்ற சமூகமாக விளங்கும் தமிழ் மக்களை தொடர்ந்தும் படுகொலை செய்வதிலும் இதனூடாக மரண பீதியில் குடாநாட்டு சமூகத்தை தொடர்ந்தும் வைததிருக்க விரும்பும் ராஐபக்ச அரசின் நோக்கங்களை நிறைவேற்றவே ஈபிடிபி அமைப்பு துணை புரிகின்றது.
மகிந்தராஐபக்ச அரசாங்கமானது போருக்குப் பின்னரும் குடாநாட்டு மக்களை மரண பீதியில் வைத்துக் கொள்ளுவதற்காக ஈபிடிபி என்ற துணை இராணுவக் குழுவை தொடர்ந்து இவ்வாறான படுகொலைகளில் ஈடுபட தொடர்ந்தும் அனுமதித்து வருகின்றது. அரசின் இந்தச் செயற்பாடுகளுக்கு துணை புரியும் கொலையாளிகளை அவசரகாலச் சட்டத்தின் மூலம் சட்ட ரீதியான பாதுகாப்பினை அரசு வழங்கி வருகின்றது.
ஈபிடிபி அமைப்பு காலம் காலமாக மேற்கொண்டுவரும் ஐனநாயகப் படுகொலைகளை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். அந்த அமைப்பு கொலைக்கலாசாரத்தினை முற்றாக கைவிட்டு ஐனநாயக வழிமுறைக்குத் திரும்ப சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்தின் மீதும், ஈபிடிபி அமைப்பின் மீதும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமெனக் கோருகின்றோம்.
செ.கஜேந்திரன்
தமிழத் தேசியததிற்கான மக்கள் முன்னணி






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.