ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதிலும் 196 ஆசனங்களுக்காக ஏழாயிரத்து முன்னூற்றி ஐம்பத்து எட்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
22 மாவட்ட தேர்தல் தொகுதிகளில் 24 அரசியல் கட்சிகளும், 310 சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் களமிறங்கியுள்ளன.
பல மாவட்டங்களில் முன்னணி அரசியல் கட்சிகள் சில தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக 836 பேர் தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 22 அரசியல் கட்சிகள் மற்றும் 16 சுயேட்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக தகுதி பெற்றுள்ளன. எனினும் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதற்கு அடுத்தபடியாக கிழக்கு மாகாண, திகாமடுல்ல மாவட்டத்தில் 680 பேர் தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.