எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை எதிர் கட்சிகளின் சார்பில் போட்டியிட வைக்கும் முயற்சிக்கு இந்தியா கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியாவிற்கு விஜயம் செய்தி ரனில் விக்கிரமசிங்கவிடம் இந்திய தரப்பு தமது அதிருப்தியினையும் எதிர்பினையும் வெளிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ள சரத் பொன்சேகா இலங்கையின் ஆட்சி அதிகாரத்திற்கு வருவது தமது தேசிய நலன்களுக்கு ஆபத்தானது என இந்தியா கருதுகின்றது.
இதனால் அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முயற்சிக்குமாறு இந்தியா ஐக்கிய தேசிய கட்சி தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் இது குறித்து அரசாங்க தரப்புடனும் தாங்கள் கலந்துரையாடுவதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.