Wednesday, November 18, 2009

போதுமான மருத்துவ வசதிகள் இன்றி வவுனியா புனாவாழ்வு முகாம்களில் கடந்த ஒரு மாதத்திற்குள் மட்டும்டும் 41 குழந்தைகள் உயிரிழப்பு.

வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு முகாம்களில் சிறந்த சுகாதார வசதிகளில்லாத நிலையினால், கடந்த மாதத்திற்குள் 41 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக மகப்பேறுக்கான சுகாதர வசதிகள் இல்லாத நிலை இன்னமும் தொடர்வதுடன், போதுமான மருத்துவ வசதிகள் இன்றி, தினமும் முதியோர்கள் பலரும் உயிரிழந்து வருவதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த குழந்தைகள் மற்றும் முதியவர்களின் உடல்கள் வவுனியா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்படிருந்த நிலையில், உரிமை கோரப்படாத உடல்கள் அரசாங்கத்தின் செலவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.